திருவனந்தபுரம்: கரோனா பேரிடர் காரணமாக சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு கேரளத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், பள்ளிக்கு வருகை தருவது மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படவில்லை. மேலும், கரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை: தமிழக அரசு
மாநில அளவில் பள்ளிக்குத் திரும்புவோம் என்ற திட்டத்தை, மாநில கல்வித் துறை அமைச்சர் வி. சிவன்குட்டி இன்று தலைநகரில் உள்ள காட்டன் மகளிர் பள்ளியில் துவக்கி வைத்தார்.
அதுபோல, பல்வேறு பள்ளிகளிலும், மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.