மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட மாநில மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன.
அதுபோன்று, பஞ்சாப், சத்தீஸ்கர், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் நவம்பர் 1 ஆம் தேதி மாநில தினத்தைக் கொண்டாடுகின்றன.
இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி மேற்குறிப்பிட்ட மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியே மாநில தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இனி ஜூலை 18 ஆம் தேதி, அதாவது மெட்ராஸ் மாகாணம், 'தமிழ்நாடு' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட அன்றே 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.