ஹிமாச்சல் இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும் காங். வெற்றி

ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஃபதேபூர், அர்கி, ஜுப்பல்-கோட்காய் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு கடந்த சனிக்கிழமை(நவ.30) இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது இரு தொகுதிகளில் காங்கிரஸும், ஒரு தொகுதியில் பாஜகவும் முன்னிலை வகித்தது. ஆனால், பிற்பகல் நிலவரப்படி மூன்று தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் நடைபெற்ற நிலையில், காங்கிரஸின் இந்த வெற்றி ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

அஸ்ஸாம் (5), மேற்கு வங்கம் (4), மத்திய பிரதேசம் (3), ஹிமாசல பிரதேசம் (3), மேகாலயம் (3), பிகாா் (2), கா்நாடகம் (2), ராஜஸ்தான் (2), ஆந்திரம் (1), ஹரியாணா (1), மகாராஷ்டிரம் (1), மிஸோரம் (1), தெலங்கானா (1) ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

அதேபோல, தாத்ரா-நகா் ஹவேலி, ஹிமாசல பிரதேசத்தின் மண்டி, மத்திய பிரதேசத்தின் கந்த்வா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com