தீபாவளியையொட்டி நவ.4 முதல் 7 வரை கரோனா தடுப்பூசி இல்லை

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4 முதல் 7-ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி போடப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தீபாவளியையொட்டி நவ.4 முதல் 7 வரை கரோனா தடுப்பூசி இல்லை
Published on
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4 முதல் 7-ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி போடப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 8-ஆம் தேதி முதல் மீண்டும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நாளை (நவ.4) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்திலும் தீபாவளியையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை நாள்களையொட்டி மும்பையில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 4, 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com