பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ ரூபிந்தர் கெளர் ரூபி புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளிலும் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதிண்டா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான ஆம் ஆத்மியை சேர்ந்த ரூபிந்தர் கெளர் அந்த கட்சியில் இருந்து நேற்று விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, இன்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரின் முன்பு காங்கிரஸ் கட்சியின் இணைந்தார்.