மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட 6 பேர் பலியான நிலையில் இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டுடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி மற்றும் மகன் மற்றும் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தில்லியில் காற்று மாசு: ஒரு வாரத்திற்கு மூடப்படும் பள்ளிகள்
பயங்கவாதிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணிப்பூரில் அசாம் ரைஃபிள்ஸ் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நமது வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அனைத்து வடிவங்களிலும் வெளிப்படக்கூடிய பயங்கரவாத செயல்களை வேரறுக்க வேண்டும் என்று இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.