காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் உள்பட 3 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் ஹைடர்போரா பகுதியில் இன்று தீவிரவாதி பதுங்கியிருப்பதை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைக் காவலர்கள் சுட்டுக்கொன்றனர்.
பலியான 2 தீவிரவாதிகளுடன் அவர்களுக்கு ஆதரவு அளித்த வீட்டின் உரிமையாளரும் தாக்குதலில் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தேடுதல் பணி தொடர்ந்து வருகிறது.