நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காற்று மாசு: பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க கூடுதலாக 1,000 பேருந்துகள்

தலைநகரான தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுப்போக்குவத்தை ஊக்குவிக்க கூடுதலாக 1000 பேருந்துகள்

News image

கோபால் ராய் (கோப்புப் படம்)

Updated On :17 நவம்பர் 2021, 10:40 am

தலைநகரான தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுப்போக்குவத்தை ஊக்குவிக்க கூடுதலாக 1000 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். 

இந்த பேருந்துகள் நாளை (நவ.17) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். பொதுமக்கள் தனியாக வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறு அறிவிப்பு வரும் வரை தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அறிவுறுத்தப்படுகிறது.

வாகனங்கள் பயன்படுத்துவதைக் குறைக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிவதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். காவல் துறையினரும், போக்குவரத்துக் காவலர்களும் இதனை உறுதி செய்ய வேண்டும். 

பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து குறைந்த அளவு கார்பன் வாயுக்களை வெளியிடும் 1000 சிஎன்ஜி சிறப்பு பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இவை நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

பொதுமக்கள் அதிக அளவு தில்லி போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளையும் மெட்ரோ ரயிலையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.