நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் அவர் பேசியதாவது, ஆந்திரம், ஒடிஸா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கிராமங்கள் தொலைத்தொடர்பு வசதி பெறும்.
இந்த கிராமங்களில் 4ஜி தொழில்நுட்ப சேவை வழங்கப்படவுள்ளது. இதற்கு ரூ.6,466 கோடி செலவாகும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதன் மூலம் மலைப்பகுதிகளில் வாழும் மக்களும் பயன்பெறுவார்கள். அடர்ந்த காடுகள், ஆறுகள், மலைப்பகுதிகளையொட்டி சாலைகளும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.