‘இன்றைய நாள் வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்படும்’: கேஜரிவால்

இந்திய வரலாற்றில் இன்றைய தினம் பொன் எழுத்துகளால் எழுதப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

இந்திய வரலாற்றில் இன்றைய தினம் பொன் எழுத்துகளால் எழுதப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களிடையே இன்று பேசிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அரவிந்த் கேஜரிவால் கூறுகையில்,

“இறுதியில் மக்கள் சொல்வதை மத்திய அரசு கேட்கும் என்பதை விவசாயிகள் நிரூபித்துள்ளனர். விவசாயிகளின் உறுதிக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகளும், லத்திகளும் காய்ந்து, நகங்கள் உருகின.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்று இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் இன்றைய தினம் எழுதப்படும். இது விவசாயிகளின் வெற்றி மட்டுமல்ல ஜனநாயகத்தின் வெற்றி. விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. போராட்டக்காரர்களை காலிஸ்தானிகள், பயங்கரவாதிகள் என்று கூறியது. ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவில்லை.”

கடந்தாண்டு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11 மாதங்களுக்கு மேலாக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com