வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே.. ஷேரிங் நல்லது கிடையாதாம்

வங்கி மோசடி, கிரெடிட் கார்டு மோசடி, ஏடிஎம் மோசடி எனற நாள்தோறும் மோசடிகள் குறித்து காவல்துறை தரப்பிலும் வங்கிகள் தரப்பிலும் எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

News image

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே.. ஷேரிங் நல்லது கிடையாதாம்

Updated On :20 நவம்பர் 2021, 2:44 pm IST


வங்கி மோசடி, கிரெடிட் கார்டு மோசடி, ஏடிஎம் மோசடி எனற நாள்தோறும் மோசடிகள் குறித்து காவல்துறை தரப்பிலும் வங்கிகள் தரப்பிலும் எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

அதற்கு ஈடாக.. இல்லை இல்லை. அதற்கு மேலாக மோசடிகள் குறித்தும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மோசடிகளை கண்டுபிடித்து எச்சரித்து அவை மக்களுக்குச் சென்றடைவதற்குள் பல மோசடிகள் நடந்தேறிவிடுகின்றன. அடுத்து என்ன புதிய மோசடிகளைக் கண்டுபிடித்து அதனையும் நிறைவேற்றி விடுகிறார்கள் மோசடியாளர்கள்.

ஆனால், எத்தனை எச்சரிக்கைக் கொடுத்தாலும் மோசடிகளிலிருந்து மக்களை காப்பாற்றுவது இயலாமல் உள்ளது. காரணம், அவ்வளவு நம்பிக்கையான வகையில் மோசடியை அரங்கேற்றுகிறார்கள்.

இதைச் செய்யவே செய்யாதீர்கள்!

  • பகிர வேண்டாம்.. வங்கிக் கணக்கு விவரங்களை
  • கிளிக் செய்ய வேண்டாம்.. நன்கு தெரியாத இணைய முகவரிகளை
  • பதில் வேண்டாம்.. போலியான வங்கி மின்னஞ்சல் முகவரிகளுக்கு
     

இம்முறை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு விடியோவுடன் எச்சரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், பகிர்தல் எப்போதுமே நல்லதாக இருப்பதில்லை. எனவே, வாடிக்கையாளர்களே, உங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் அல்லது யுபிஐ பின் விவரங்களை எப்போதும் யாருடனும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, எஸ்பிஐ வங்கியிலிருந்து யாரும் உங்களை தொலைபேசியில் அழைத்து வங்கி தொடர்பான விவரங்களைக் கேட்க மாட்டார்கள் என்றும், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தால் தெரிவிக்க வேண்டிய உதவி எண் உள்ளிட்டவற்றையும் வங்கி அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.