குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேசத்துக்கு (கான்பூர்) பயணம் மேற்கொள்கிறார்
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
நவம்பர் 24-ஆம் தேதி குடியரசுத் தலைவர், சௌத்ரி ஹா்மோகன் சிங் யாதவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 25-ஆம் தேதி, ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.