நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

‘கத்ரினா கைப்பின் கன்னங்கள் போன்ற சாலைகள்’: சர்ச்சைக்குள் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா சாலைகளை கத்ரினா கைப்பின் கன்னங்களுடன் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

News image

‘கத்ரினா கைப்பின் கன்னங்கள் போன்ற சாலைகள்’: சர்ச்சைக்குள் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்

Updated On :24 நவம்பர் 2021, 8:32 pm IST

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா சாலைகளை கத்ரினா கைப்பின் கன்னங்களுடன் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து உதய்பூர்வதி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ராஜேந்திர சிங் குத்தா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.  

இந்நிலையில் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜேந்திர சிங் குத்தாவிடம் அங்கிருந்த மக்கள் சிலர் தங்களது பகுதியில் சாலை வசதிகள் சரிவர இல்லை என புகார் தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தனது தொகுதியில் சாலைகள் கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அமைச்சர் ராஜேந்திர சிங் குத்தாவின் காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

சாலையின் தரத்தை நடிகையின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.