குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற திட்டக் குழு வியாழக்கிழமை கூடவுள்ளது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் நவ. 29-ஆம் தேதி முதல் டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க | நவ. 28-ல் மாநிலங்களவை கட்சித் தலைவர்களுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை
இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற திட்டக்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
ஏற்கனவே மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.