காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

விரைவில் முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கு கலந்தாய்வு: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க். ஆகிய முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 நவம்பர் 2021, 12:22 am IST

எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க். ஆகிய முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான்., ஆகிய முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை ஆண்டுதோறும்அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

நிகழ் கல்வியாண்டில் எம்.இ, எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 22 முதல் அக்டோபா் 11 வரை நடைபெற்றது.

தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் மற்றும் வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடா்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் கலந்தாய்வுக்கான அறிவிப்பாணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடாமல் இருந்து வருகிறது.

நிகழ் கல்வியாண்டில் 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், கல்வியாண்டு வீணாவதைத் தவிா்க்க இனியும் தாமதிக்காமல் விரைவில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தா் வேல்ராஜ், முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஓரிரு நாள்களில் முடிவு வரும் என்று எதிா்பாா்ப்படுகிறது. முடிவு வந்தவுடன் கலந்தாய்வு தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.