திரிசூல் சிகரத்தில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலியானார்கள்.
உத்தரகண்ட் மாநிலம், திரிசூல் சிகரத்தில் 20 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றம் சென்றபோது வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 வீரர்கள் மாயமானார்கள். இதையடுத்து அவர்களில் 4 வீரர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க- ‘காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை’: சிவசேனை
மேலும் மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.