கேரளத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டமானது எர்ணாகுளம்!

கேரளத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் மாவட்டம் என்ற சாதனையை எர்ணாகுளம் பெற்றுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் மாவட்டம் என்ற சாதனையை எர்ணாகுளம் பெற்றுள்ளது. 

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அந்தந்த மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன. கேரளத்திலும் தற்போது பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கும் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கேரளத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100% கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டம் என்ற என்ற பெருமையை எர்ணாகுளம் பெற்றுள்ளது.
 
மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் எர்ணாகுளம் மாவட்டத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

கேரளத்தில் நேற்றைய கரோனா பாதிப்பு 13,217, பலி 121 ஆக பதிவானது. தற்போது அங்கு கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,41,155 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com