உ.பி: தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தைக் குடித்த மகன்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முஹல்புராவைச் சேர்ந்த இளைஞர் தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தை குடித்திருக்கிறார்.
உ.பி: தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தைக் குடித்த மகன்
உ.பி: தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தைக் குடித்த மகன்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முஹல்புராவைச் சேர்ந்த இளைஞர் தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தை குடித்திருக்கிறார்.

மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள முஹல்புராவில் பித்தளை வியாபாரியின் 17-வயது மகன் தந்தை இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுக்காததால் அமிலத்தைக் குடித்திருக்கிறார்.

இதுகுறித்து அப்பகுதியின் காவல்துறை அதிகாரி , ‘ இருசக்கர வாகனத்தை தந்தை வாங்கிக் கொடுக்காததால் அவருடைய மகன் அமிலத்தை குடித்திருக்கிறார்.உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். இருப்பினும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்’ எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com