உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முஹல்புராவைச் சேர்ந்த இளைஞர் தந்தை இருசக்கர வாகனம் வாங்கித் தராததால் அமிலத்தை குடித்திருக்கிறார்.
மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள முஹல்புராவில் பித்தளை வியாபாரியின் 17-வயது மகன் தந்தை இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுக்காததால் அமிலத்தைக் குடித்திருக்கிறார்.
இதுகுறித்து அப்பகுதியின் காவல்துறை அதிகாரி , ‘ இருசக்கர வாகனத்தை தந்தை வாங்கிக் கொடுக்காததால் அவருடைய மகன் அமிலத்தை குடித்திருக்கிறார்.உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். இருப்பினும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்’ எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.