தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூடானிலிருந்து கடத்திவரப்பட்ட 1.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சூடானிலிருந்து துபை வழியாக ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு நேற்று(அக்-6) வந்த பெண் பயணியை பரிசோதனை செய்தபோது உள்ளாடையில் 1.2 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின் சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பெண்ணை கைது செய்ததோடு அவரிடமிருந்த தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.58 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உள்ளாடையில் வைத்து 3 பேர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.