அண்டை நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வங்கதேசம், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் 10 லட்சம் கரோனா தடுப்பூசிகளை ஈரான் நாட்டிற்கு வழங்க ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.