ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2021-ம் ஆண்டு மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் மீது குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்த ஆண்டில் மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பயங்கரவாதிகளின் தாக்குதலால் கடந்த 5 நாள்களில் 7 பேர் உயிரிழந்தனர். 2021-ல் மட்டும் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து தொழிலாளர்கள் எனக் கூறினார்.