உத்தரப் பிரதேசம் மாநிலம் பரபங்கியில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரபங்கியில் இன்று (அக்-7)வியாழக்கிழமை காலை பேருந்தும் லாரியும் நேரடியாக மோதிக்கொண்டது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 13 பேர் பலியானதோடு 30 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் பலி
பின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.
விபத்தை நேரில் பார்த்த ஒருவர் . ‘ லாரியும் பேருந்தும் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. திடீரென குறுக்கே மாடு வந்ததால் அதைக் காப்பாற்றுவதற்காக ஓட்டுனர் வண்டியைத் திருப்பியதும் விபத்து ஏற்பட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , விபத்தில் இறந்தவர்களுக்கு தன் இரங்கலைப் பதிவு செய்ததோடு பலியானவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.