இந்தியாவில் இதுவரை 95.89 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,86,092 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 95,89,78,049 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 38,68,20,261 இரண்டாம் தவணை - 10,40,73,546 |
45 - 59 வயது | முதல் தவணை - 16,61,56,424 இரண்டாம் தவணை - 8,38,76,362 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,48,69,202 இரண்டாம் தவணை - 6,00,12,131 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,75,424 இரண்டாம் தவணை - 90,36,583 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,59,259 இரண்டாம் தவணை - 1,53,98,857 |
மொத்தம் | 95,89,78,049 |