நாட்டில் இதுவரை 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை அமைச்சர்

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 99 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 99 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

நாடு முழுவதும் 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியா, 100 கோடி தடுப்பூசியை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 98.67 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  39,58,41,135

இரண்டாம் தவணை -  11,40,66,397

45 - 59 வயது

முதல் தவணை -  16,84,48,531

இரண்டாம் தவணை -  8,71,46,650

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,60,88,795

இரண்டாம் தவணை -  6,17,86,566

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,76,000

இரண்டாம் தவணை -  90,91,443

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,62,479

இரண்டாம் தவணை -   1,55,61,415

மொத்தம்

98,67,69,411

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com