நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 99 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
நாடு முழுவதும் 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியா, 100 கோடி தடுப்பூசியை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 98.67 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 39,58,41,135 இரண்டாம் தவணை - 11,40,66,397 |
45 - 59 வயது | முதல் தவணை - 16,84,48,531 இரண்டாம் தவணை - 8,71,46,650 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,60,88,795 இரண்டாம் தவணை - 6,17,86,566 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,76,000 இரண்டாம் தவணை - 90,91,443 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,62,479 இரண்டாம் தவணை - 1,55,61,415 |
மொத்தம் | 98,67,69,411 |