'பாஜகவால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது': மெகபூபா முப்தி விமரிசனம்

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமரிசித்துள்ளார்.
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமரிசித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் வியாழக்கிழமை ராணுவ வீரர் ஒருவர் சிறுமி ஒருவரின் பையை சோதனையிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, “ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கூட சந்தேகிக்கும் நிலைதான் தற்போது நீடித்து வருகிறது. இதைத்தான் பாஜக கொண்டு வந்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பாஜகவின் கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com