விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'பாஜகவால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது': மெகபூபா முப்தி விமரிசனம்

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமரிசித்துள்ளார்.

News image

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

Updated On :21 அக்டோபர் 2021, 8:28 am

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமரிசித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் வியாழக்கிழமை ராணுவ வீரர் ஒருவர் சிறுமி ஒருவரின் பையை சோதனையிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, “ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கூட சந்தேகிக்கும் நிலைதான் தற்போது நீடித்து வருகிறது. இதைத்தான் பாஜக கொண்டு வந்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பாஜகவின் கொள்கைகளால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.