ஏழை மக்களிடமிருந்து பாஜக கொள்ளையடிப்பதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2022) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் அரசியல் அரங்கில் பரபரப்பு கூடியுள்ளது.
இதையும் படிக்க | நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29-ல் தொடக்கம்
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பாஜக மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தனது சுட்டுரைப் பதிவில் அவர், “கடந்த காலங்களில் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த பணங்களை ’பொய்யில் பூத்த மலர்’ ஒன்று மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இன்று மத்தியிலும், உத்தரப்பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசு மக்களின் அடிப்படை வசதிகளைப் பறிப்பதிலும், அவர்களின் சட்டைப் பைகளில் உள்ள சேமிப்புகளைக் கொள்ளையடிப்பதையுமே முன்னுரிமை காட்டி செயல்பட்டு வருகிறது” என அகிலேஷ் யாதவ் குற்றம் சுமத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



