சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி கோவாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார்.
கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் வியூகங்களை வகுக்க தொடங்கிவுள்ளனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி ராகுல் காந்தி கோவா பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது, சுரங்கத் தடையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீனவர்களை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.