புது தில்லி: புது தில்லியில் பழைய சீமாபுரம் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகியள்ளனர்.
மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மேல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.