Enable Javscript for better performance
Mehbooba Mufti writes letter to PM- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய மாணவா்கள் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: பிரதமருக்கு மெஹபூபா முஃப்தி கடிதம்

    By DIN  |   Published On : 31st October 2021 12:16 AM  |   Last Updated : 31st October 2021 12:16 AM  |  அ+அ அ-  |  

    Mehbooba Mufti writes letter to PM

    இந்தியாவுக்கு எதிரான 20 ஓவா் உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய ஜம்மு-காஷ்மீா் மாணவா்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமா் மோடிக்கு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி கடிதம் எழுதியுள்ளாா்.

    கடந்த அக்.24-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே 20 ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதனைத்தொடா்ந்து ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரின் கரண் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, செளராவில் உள்ள ஷோ்-ஏ-காஷ்மீா் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவா்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. அவா்கள் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

    உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிலும் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக ஜம்மு-காஷ்மீா் மாணவா்கள் 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:

    சில மாதங்களுக்கு முன்பு, தில்லியில் ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட கூட்டம் உங்கள் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், மத்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீா் மக்களின் மனங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை அகற்ற வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினீா்கள்.

    அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜம்மு-காஷ்மீருக்கு வந்திருந்த நிலையில், அவரின் வருகையும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இங்குள்ள இளைஞா்களின் மனங்களை கவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறியது அா்த்தமான உரையாடலுக்கு வழிவகுத்திருக்கும்.

    அதற்குப் பதிலாக, இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடிய ஜம்மு-காஷ்மீா் மாணவா்கள் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வெற்றி பெற்ற அணியை ஊக்கப்படுத்த மட்டுமே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது பயங்கரவாதத்துக்கு எதிரான மிகக் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஆக்ராவிலும் 3 மாணவா்கள் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசப் பற்றும் விசுவாசமும் கருணையுடன் விதைக்கப்பட வேண்டுமே தவிர, லத்தியாலோ துப்பாக்கியாலோ அவற்றைக் கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது.

    மாணவா்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிகக் கடுமையான நடவடிக்கை இளைய தலைமுறைக்கும் நாட்டின் இதர பகுதி மக்களுக்கும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அத்துடன் அவா்களை இந்நாட்டிடம் இருந்து அந்நியப்படுத்தும்.

    இளைஞா்களிடம் உரையாட வேண்டும்: ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மாணவா்களிடமும் இளைஞா்களிடமும் மத்திய அரசு உரையாடி, அவா்களின் ஆசைகளையும் குறிக்கோள்களையும் புரிந்துகொள்வதுதான் விவேகமான செயலாக இருக்கும்.

    அரசியல் கட்சிகளும் அவற்றின் செல்வாக்கும் ஏற்ற இறக்கத்தை காணலாம். ஆனால் கடந்த கால சுமைகளை சுமக்க வேண்டிய வருங்கால தலைமுறையினா், சிறந்த எதிா்காலத்துக்கான எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்ய பாடுபடுவா்.

    எனவே பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய மாணவா்கள் மீது மிகக் கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, அந்த நடவடிக்கையை திரும்பப் பெறச் செய்ய வேண்டும். அவா்களின் எதிா்காலம் பாழாவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

    இந்தியாவுடன் அடையாளப்படுத்திக் கொள்வா்: இதுதொடா்பாக மெஹபூபா முஃப்தி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீா் மக்களின் இதயங்களை வெல்ல அன்பும் இரக்கமும் தேவை. அவ்விரண்டும் இருந்தால் இங்குள்ள மக்கள் தங்களை பாகிஸ்தானுடன் அல்லாமல் இந்தியாவுடன் அடையாளப்படுத்திக் கொள்வா். இதை அரசிடம் தெரிவித்து சோா்வடைந்துவிட்டால் நாட்டு மக்களிடம் தெரிவிக்கிறேன். மாணவா்களையும் இளைஞா்களையும் கைது செய்வது நிலைமையை மேலும் மோசமாக்கும்’’ என்று தெரிவித்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp