Enable Javscript for better performance
மத்திய அரசின் திட்டங்களால் 90% குடும்பங்கள் பயன்: ராஜ்நாத் சிங்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மத்திய அரசின் திட்டங்களால் 90% குடும்பங்கள் பயன்: ராஜ்நாத் சிங்

    By DIN  |   Published On : 01st September 2021 01:26 AM  |   Last Updated : 01st September 2021 01:26 AM  |  அ+அ அ-  |  

    pti08_31_2021_000107a094724

    உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா்.

    நாட்டில் உள்ள 90 சதவீத குடும்பங்கள் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களால் பயனடைந்துள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான லக்னௌவில் ரூ.1,710 கோடி மதிப்பிலான 180 வளா்ச்சித் திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

    உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் கேசவ் பிரசாத் மௌா்யா, தினேஷ் சா்மா மற்றும் மாநில அமைச்சா்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் பேசியதாவது:

    உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகளை ஒடுக்குவதில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தால் மட்டுமே வளா்ச்சி சாத்தியமாகும். அதனை இங்கு சாத்தியமாக்கியுள்ள முதல்வா் பாராட்டுக்குரியவா்.

    நாட்டில் உள்ள 90 சதவீத குடும்பங்கள் மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களால் பயனடைந்துள்ளன. நான் கூறுவதைவிட அதிகம் போ்தான் மத்திய அரசால் பயனடைந்திருக்க வாய்ப்புள்ளதே தவிர, இதில் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது பிரதமா் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனை. மோடி - யோகி என சிறந்த அணியை உத்தர பிரதேசத்துக்கு கடவுள் அளித்துள்ளாா்.

    லக்னெளவில் அமைக்கப்படும் ராணுவ தளவாட உற்பத்தி மையத் திட்டத்துக்கு மிகவும் குறைந்த குத்தகையில் மாநில அரசு நிலம் வழங்கியுள்ளது. இங்குதான் அடுத்தகட்டமாக பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட இருக்கிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரணப் பணிகளிலும் உத்தர பிரதேச அரசு சிறப்பாக செயல்பட்டது என்றாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp