மகாராஷ்டிரத்தில் சிறுத்தையும், பூனையும் மோதிக்கொண்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பூனையைத் துரத்திச் சென்ற சிறுத்தை தவறுதலாகக் கிணற்றுக்குள் விழுந்துள்ளது. கிணற்றுக்குள் சிறுத்தையும், பூனையும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும்போல் எடுக்கப்பட்ட விடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி வருகிறது.
இதையும் படிக்க | உ.பி.யில் 20 நாய்கள் விஷம் வைத்துக் கொலை: முதல் தகவல் அறிக்கை பதிவு
இதுகுறித்து நாசிக் மேற்கு மண்டல துணை வனப் பாதுகாவலர் பங்கஜ் கர்க் கூறியது:
"பூனையைத் துரத்திய சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்தது. இதன்பிறகு, சிறுத்தையை மீட்டு அதன் வசிப்பிடத்தில் விடப்பட்டது."