ஆந்திரத்தில் பணி செய்து கொண்டிருந்த காவல் நிலையத்திலேயே ரூ.16 லட்சம் திருடிய காவலரை சென்னையில் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்வித் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் ஜனார்த்த நாயுடு என்பவர் கடந்த ஆக-29 ஆம் தேதி காவல் நிலையத்தில் பாதுகாப்புக் காரணமாக வைக்கப்பட்ட ரூ.16 லட்சத்தை திருடியுள்ளார். ஆனால் இச்சம்பவம் செப்-2 ஆம் தேதியே தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிக்க | மனைவி உள்பட 3 பெண்களை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்!
பணத்தை எடுத்துக் கொண்டு விடுமுறையில் சென்ற காவலரை செல்போனில் தொடர்பு கொண்ட காவல்துறையினருக்கு கைப்பேசி சில நாட்களாக அணைத்து வைக்கப்பட்டது தெரிந்ததும் தேடுதலில் ஈடுபட்டனர்.
தனிப்படை தேடுதலில் தற்போது இன்று (செப்-6) ரூ.14 லட்சத்துடன் சென்னையில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
திருட்டிற்கான காரணத்தை விசாரித்த போது சில நாட்களாகவே ஜனார்த்தன் நாயுடு குடும்ப பிரச்னைகளால் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்திருக்கிறது.
மேற்கொண்டு விசாரணை நடைபெறும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.