விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும், கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டுமென செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image

செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்.

Updated On :9 செப்டம்பர் 2021, 12:56 pm

DIN

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும், கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டுமென செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கரோனா தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பேசியது:

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மொத்த பாதிப்பில் 68 சதவீத பாதிப்பு கேரளத்தில் பதிவானது. நாம் இரண்டாம் அலையில் இருப்பதை இது உறுதி செய்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணி முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 20 லட்சம் பேருக்கு போடப்பட்ட நிலையில் செப்டம்பரில் 78 லட்சம் பேருக்கு போடப்படுகிறது. இது இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசியது:

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 58 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 100 சதவீதம் பேரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வேறு நாடுகளிலும் இது பின்பற்றப்படவில்லை. அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கவில்லை. இருப்பினும், பள்ளி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

சில நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கு தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் உலக சுகாதார மையம் பரிந்துரைக்கவில்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவியல்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.