மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,075 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3,056 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை64,94,254 ஆக உயர்ந்துள்ளது. இதில் 63,02,816 பேர் குணமடைந்துள்ளனர். 49,796 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கரோனா
இன்றைய நிலவரப்படி 16,672 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 97.05 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.12 சதவிகிதம்.