மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி நிறுவப்பட்ட 6,116 விநாயகா் சிலைகள் சனிக்கிழமை நகரின் பல்வேறு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இதுதொடா்பாக பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘மும்பையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சனிக்கிழமை நீா்நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி மாலை 6 மணி வரை 6,116 சிலைகள் ஏரிகளிலும், செயற்கை நீா்நிலைகளிலும் கரைக்கப்பட்டன. இதில் 6,047 சிலைகள் வீடுகளிலும், 55 சிலைகள் பொது இடங்களிலும் வைத்து வழிபடப்பட்டவை. இந்த நிகழ்வையொட்டி போலீஸாா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனா். சிலைகள் கரைப்பின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை’’ என்று தெரிவித்தாா்.