இந்தியாவில் இதுவரை 82.57 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 68,26,132 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 82,57,80,128 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 33,43,93,211 இரண்டாம் தவணை - 6,46,03,335 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,28,73,231 இரண்டாம் தவணை - 7,07,25,092 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,78,87,532 இரண்டாம் தவணை - 5,32,03,140 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,69,776 இரண்டாம் தவணை - 87,65,283 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,46,593 இரண்டாம் தவணை - 1,46,12,935 |
மொத்தம் | 82,57,80,128 |