கரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய அரசின் முடிவை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவத் தொடங்கிய பிறகு மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டது. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளுக்கு மீண்டும் கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை அறிவித்தாா்.
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன், மத்திய அரசின் இந்நடவடிக்கை உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் சமநிலையை ஏற்படுத்த உதவும் எனத் தெரிவித்தாா்.