மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி சிறிது பதற்றமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய பிரசாரத்தின் போது மம்தா பேசுகையில், இடைத்தேர்தலில் தான் தோற்றால் வேறொருவர் முதல்வராவார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறுகையில்,
“மம்தா சிறிது பதற்றமாக இருக்கிறார். அவருக்கு எதிராக மக்களிடம் உள்ள மனக்கசப்பை அவர் அறிந்திருப்பதை நான் உணர்கிறேன். தேர்தலுக்கு பிந்தைய வன்முறை போன்றவை பவானிபூர் தேர்தலில் பிரச்னையாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.”