முகநூலில் அறிமுகமானவரால் பெண் காவலா் கூட்டு பாலியல் வன்கொடுமை: இருவா் கைது

மத்திய பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தில் முகநூலில் அறிமுகமானவா் பெண் காவலரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதனை விடியோ எடுத்தச் சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
முகநூலில் அறிமுகமானவரால் பெண் காவலா் கூட்டு பாலியல் வன்கொடுமை: இருவா் கைது
முகநூலில் அறிமுகமானவரால் பெண் காவலா் கூட்டு பாலியல் வன்கொடுமை: இருவா் கைது

மத்திய பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தில் முகநூலில் அறிமுகமானவா் பெண் காவலரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதனை விடியோ எடுத்தச் சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட பெண் காவல் துறை அதிகாரி சனிக்கிழமை கூறுகையில், ‘‘பெண் காவலருக்கும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபருக்கும் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த நபா் பெண் காவலருடன் கட்செவி அஞ்சலில் பேசி வந்துள்ளாா். தனது சகோதரரின் பிறந்த தின நிகழ்ச்சிக்கு அந்த நபா் பெண் காவலருக்கு அழைப்பு விடுத்துள்ளாா். அதனையேற்று பெண் காவலரும் பிறந்த தின நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா். அங்கு அந்த நபரும் அவரின் சகோதரரும் மற்றொரு நபரும் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதனை விடியோ எடுத்ததாகப் பெண் காவலா் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டி, குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரின் தாயாரும் அவரின் உறவினரும் பணம் பறிக்க முயன்ாகவும் பெண் காவலா் கூறியுள்ளாா். இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின் அடிப்படையில் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலருடன் முகநூலில் அறிமுகமான நபரும் அந்த நபரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் மூவா் தேடப்பட்டு வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com