பிரதமர் மோடி ‘காலநிலை மாற்றமே புதிய நோய்களையும் அழிவுகளையும் கொண்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.
நாட்டின் விவசாயத் துறைக்காக சிறப்பம்சம் கொண்ட 35 புதிய வகை பயிர்களை அர்பணிப்பு செய்து அதுகுறித்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, ‘காலநிலை மாற்றமே புதிய நோய்களையும் அழிவுகளையும் கொண்டு வருகிறது. மனிதர்களை மட்டுமல்லாமல் கால்நடைகளையும் , பயிர்களையும் பெரிதும் பாதிக்கிறது.இந்தப் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் ஆய்வுகள் தேவை’ எனத் தெரிவித்தார்.
மேலும் அறிவியல் ,அரசு மற்றும் சமுதாயம் மூன்றும் இணைந்தால் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார்.