அமித் ஷா இல்லத்தில் அமரீந்தர் சிங்!
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்துக்குச் சென்றுள்ளார்.


பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்துக்குச் சென்றுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. தகவல்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அவரது தில்லிப் பயணம் அமைந்தது.
அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்தன.
ஆனால், புதிய முதல்வருக்காக தில்லியிலுள்ள இல்லத்தை காலி செய்யவே தில்லி வந்துள்ளதாகவும் எந்த அரசியல் தலைவரையும் சந்திக்கப்போவதில்லை எனவும் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது அமித் ஷா இல்லத்தைச் சென்றடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...