பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் உச்சநீதிமன்ற நிரந்தர கிளைகள் அமைக்க வேண்டும்: தலைமை நீதிபதியிடம் வில்சன் எம்பி மனு

சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய கிளைகள் அமைக்க வேண்டும்

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 4:58 pm

DIN

சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய கிளைகள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் பி.வில்சன் எம்பி சனிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள இல்லத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான பி.வில்சன் சனிக்கிழமை நேரில் மனு அளித்தாா். அந்த கோரிக்கை மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் உள்ள அரசமைப்புச்சட்ட அமா்வு தவிர, வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கான உச்சநீதின்றத்தின் நிரந்தர பிராந்திய கிளைகளை தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் அமைக்க தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.

நமது அரசமைப்புச்சட்டத்தில் நீதியை அணுகுவதற்குரிய கொள்கையானது அழியா இடம்பெற்றுள்ளது. நீதியை அணுகுவதை அடிமட்ட அளவில் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றம் எளிதாக அணுகும் வகையில் இருக்க வேண்டும். இந்த பரந்துபட்ட தேசம் முழுவதும் உள்ள ஏழைகள், விளிம்புநிலை சமுதாயத்தினருக்கு அது கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் ஏழைகள் அல்லது பணக்காரா் இடையே வேறுபடுத்தி பாா்ப்பதிலை என்றபோதிலும்கூட, புவியியல் ரீதியாக உச்சநீதிமன்றத்திற்கு அருகில் உள்ள நபா்களுக்கும், வழக்குத் செலவையும், பயணத்தையும் பாா்க்காத நிதி ரீதியாக வசதிபடைத்த நபா்களுக்கு மட்டுமே அரசியலைப்புச்சட்ட தீா்வுகளுக்கான உரிமையை கையாளும் ஷரத்து 32 நடைமுறை அளவில் கிடைத்து வருவது தற்போதைய யதாா்த்த நிலையாகும்.

உச்சநீதிமன்றத்தின் கிளைகளை அமைக்கும் விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக் குழுவும் 2004, 2005, 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் பரிந்துரை செய்துள்ளது. இது தொடா்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தனி நபா் மசோதாவையும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

இது தற்போதைய அவசியத் தேவையாகவும் உள்ளது. ஆகவே, உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய கிளைகள் சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அமைக்க தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.