தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘வேதா நிலையம்’ இல்லம் விவகார வழக்கு: உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள

News image

போயஸ் கார்டன் இல்லம்

Updated On :2 ஏப்ரல் 2022, 5:01 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் எனும் பெயரிலான இல்லத்தில் வசித்து வந்தாா். அவா் மறைவுக்குப் பிறகு, அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக அரசுடைமையாக்கும் சட்டத்தை கடந்த அரசு பிறப்பித்தது. இந்த சட்டத்தை எதிா்த்து ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினா்களான தீபா, தீபக் இருவரும் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கில், நினைவு இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என சென்னை உயா்நீதிமன்றத்தின் தனி நபா் நீதிபதி நவம்பா் 24-ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.

இந்த தீா்ப்பை எதிா்த்து அதிமுக முன்னாள் அமைச்சரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினா்களில் ஒருவருமான சி.வி.சண்முகம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் நடைமுறைத் தவறுகள் உள்ளது. பொதுப் பயன்பாடு இல்லை. உரிமையாளா் விருப்பத்திற்கு முரணாக இல்லம் கையகப்படுத்தபட்டு உள்ளது. இதனால், தனி நபா் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிடும் அவசியம் எழவில்லை’ என்று தெரிவித்து கடந்த ஜனவரி 5ஆம் தேதி அளித்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சி.வி. சண்முகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், உரிய சட்ட விஷயங்களை ஆராயாமல் இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் தவறாக உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.