குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் தலா ரூ. 225 ஆகக் குறைக்கப்படுவதாக சீரம் இன்ஸ்ட்டிடியூட் (எஸ்ஐஐ) மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்துள்ளன.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 4:38 pm IST


கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் தலா ரூ. 225 ஆகக் குறைக்கப்படுவதாக சீரம் இன்ஸ்ட்டிடியூட் (எஸ்ஐஐ) மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்துள்ளன.

எஸ்ஐஐ தலைமைச் செயலர் அலுவலர் அதார் பூனாவாலா ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாவது:

"மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திய பிறகு தனியார் மருத்துவமனைகளுக்கான ஒரு தவணை கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை ரூ. 600-இல் இருந்து ரூ. 225 ஆகக் குறைக்க எஸ்ஐஐ முடிவு செய்துள்ளது."

பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இணை மேலாண்மை இயக்குநருமான சுசித்ரா எல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பிறகு, ஒரு கோவேக்சின் தடுப்பூசியின் விலையை ரூ. 1,200-இல் இருந்து ரூ. 225 ஆகக் குறைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்."

மத்திய அரசுக்கு இதுவரை பெரும்பாலான தடுப்பூசிகளை விநியோகித்தது எஸ்ஐஐ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களைக் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.