புதுச்சேரி தலைமைச் செயலாளர் தில்லிக்கு மாற்றம்

புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் மத்திய அரசு பணிக்காக தில்லிக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்வனி குமார்
அஸ்வனி குமார்

புதுவை யூனியன் பிரதேசத்தில் தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் ஐஏஎஸ் அதிகாரி தில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அருணாச்சல பிரதேச ஐஏஎஸ் அதிகாரியான ராஜுவ் வர்மா, புதுவை யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதுவையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைச் செயலராக பணியாற்றிவந்த அஸ்வனி குமாரை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக புதுச்சேரியின் ஆளும், எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தி வந்த நிலையில், அவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com