புதுச்சேரி தலைமைச் செயலாளர் தில்லிக்கு மாற்றம்
புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் மத்திய அரசு பணிக்காக தில்லிக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


புதுவை யூனியன் பிரதேசத்தில் தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் ஐஏஎஸ் அதிகாரி தில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அருணாச்சல பிரதேச ஐஏஎஸ் அதிகாரியான ராஜுவ் வர்மா, புதுவை யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
புதுவையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைச் செயலராக பணியாற்றிவந்த அஸ்வனி குமாரை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக புதுச்சேரியின் ஆளும், எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தி வந்த நிலையில், அவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...