நவாப் மாலிக் வழக்கு: நீதிமன்றத்தில் 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
நவாப் மாலிக்
நவாப் மாலிக்
Published on
Updated on
1 min read


பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.

பின், மும்பை உயர் நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது.

கடந்த மார்ச் 7-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் இருந்த நவாப் மாலிக்கை மார்ச் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், நீதிமன்றக் காவல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இதையடுத்து, அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவல் ஏப்ரல் 22-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நவாப் மாலிக்கிற்கு எதிராக 5,000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்க இயக்குநரகம் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com