‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் 2018 முதல் 2020-ஆண்டு வரையில் 4,690 போ் கைது செய்யப்பட்டு, அவா்களில் 149 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நிதியானந்த் ராய் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
யுஏபிஏ சட்டத்தின் கீழ் 2018-ஆம் ஆண்டில் 1,421 போ் கைது செய்யப்பட்டு, 35 போ் தண்டிக்கப்பட்டனா். 2019-ஆம் ஆண்டில் 1,948 போ் கைது செய்யப்பட்டு, 34 போ் தண்டிக்கப்பட்டனா். 2020-ஆம் ஆண்டில் 1,321 நபா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களில் 80 பேரின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனா் என்று தெரிவித்துள்ளாா்.