அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம்
அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை கடிதம் அனுப்பியது.


அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை கடிதம் அனுப்பியது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26-இல் நிறைவடைகிறது. பொதுவாக, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை ஓய்வுபெறும் தலைமை நீதிபதியே பரிந்துரை செய்வது வழக்கம்.
அந்த வகையில், என்.வி.ரமணாவுக்கு அடுத்தபடியாக யு.யு. லலித் மூத்த நீதிபதி என்ற அந்தஸ்தில் உள்ளாா். அவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், 3 மாதத்துக்கும் குறைவாகவே அந்தப் பதவியில் நீடிப்பாா்.
வரும் நவம்பா் 9-ஆம் தேதி யு.யு.லலித் தனது 65-ஆவது வயதை எட்டுவதால், அவரது பதவிக்காலம் நவம்பா் 8-இல் நிறைவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...