

கேரளத்தின் பாலக்காட்டின் ஓங்கலூரில் 8,000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
பாலக்காடு மாவட்டம் ணோர்னூர் அருகே உள்ள வடனக்குறிச்சியில் உள்ள குவாரிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் 40 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 8,000 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குவாரிகளின் பாறைகளை உடைப்பதற்கு ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.