
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முதல்வர் பர்வேஸ் இலாஹி தலைமையிலான அரசாங்கத்தில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் புதிதாகப் பதவியேற்ற உறுப்பினர்களுக்கு ஆளுநர் மொஹம்மது பலீக்-உர்-ரஹ்மான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உமர் சர்பராஸ் சீமா பிஎம்எல்-என் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய மறுத்துவிட்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் இலாஹி மற்றும் பிற முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: தகைசால் தமிழர் விருது: ஆர்.நல்லகண்ணு தேர்வு!
பஞ்சாப் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், மக்களுக்குச் சேவை செய்வதற்கும் மாகாண அமைச்சர்கள் இரவும் பகலும் பாடுபடுவார்கள் என்று நம்பப்படுகிறது. என்று முதல்வர் கூறினார்.
பஞ்சாப் முதல்வர் தேர்தலில் பெரும் நாடகத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பஞ்சாப் முதல்வர் பெர்வைஸ் இலாஹியுடன் இணைந்து மாகாண அமைச்சரவையை இறுதி செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.